நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!
Saturday, February 25th, 2023நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகில் சிறந்த விமான சேவையில் இலங்கைக்கு பின்னடைவு!
மாணவர்களுக்கு தினமும் 100 ரூபா! -கல்வி அமைச்சு!
சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் – குறைகள் சரி செய்யப்படும் என...
|
|