யாழ்ப்பாணத்தில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்க நடவடிக்கை!

Friday, October 27th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை உலர வைப்பதற்காக மூன்று இடங்களில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப:கின்றது.

இவை இந்த வருடத்திற்குள் அமைக்கப்பட்டு முடிவுறுத்தப்படுமென்று மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.

தொல்புரம், கரவெட்டி, தனங்களப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த நெற்கதிர்களை உலரவைக்கும் மேடைகள் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: