பதிவு நடவடிக்கைகள் ஜனவரி 01 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Saturday, December 31st, 2016கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் கருமபீடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 01ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் பதிவு செய்தல் மற்றும் பதிவுகளை புதுப்பித்தல் நடவடிக்கைகனை பிரதான அலுவலகம் அல்லது பிரதேச அலுவலகங்கள் ஊடாக செய்து கொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரதேச செயலகப்பிரிவில் தொழில் தேடுவோர் விபரங்கள் சேகரிப்பு!
ரயில் நிலைய அதிகாரியை வெட்டிவிட்டு தப்பியோடியது மர்மகும்பல்!
ஜனாதிபதி செயலணியில் யாழ். பல்கலையின் துணைவேந்தர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம்!
|
|