யாழ்.வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு!

Thursday, April 1st, 2021

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்குக் காரணம் கொரோனாவின் பரம்பல் தீவிரம் எவ்வாறு இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகவே.இதன் மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் பிரகாரம் இதனைக் கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றுமு; அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வித...
நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப...
தொடரும் வரட்சி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டு!