நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!
Saturday, January 25th, 2025
நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில், முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்புக் காவலர் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த தாம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
கூடுதலாக, தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


