நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்றையதினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், இருதரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டிருந்தது.இந்த சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றும் ஒரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|