அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, December 3rd, 2021அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதிமுதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்கக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெள்ள அனர்த்தம்: உதவிக்கரம் நீட்டியது இந்தியா !
கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில் !
சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பு இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது - தேசிய பாதுகா...
|
|