உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, March 1st, 2021

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை, விரைவில் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, ஏப்ரலில் வெளியிடப்படும் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களை, வரும் செப்டம்பரில் பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளதுடன் இதன் பெறுபெறுகள் எதிர்வரும் ஜூனில் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: