நாட்டின் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கு சர்வதேசத்தில் அதிக கேள்வி!

Thursday, March 21st, 2019

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் மற்றும் பழங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டில் மரக்கறி மற்றும் பழச்செய்கையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தென் கொரிய அரசு முன்வந்துள்ளதாக, விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: