வெளிமாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்தில் – இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022

யாழ். வலயத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலேயே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தீவகம், யாழ். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே இவ்வாறு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.

இவ்வாறான நிலையில் தற்போது முதற்கட்டமாக 27 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் 27 பேரும் மேல்முறையீடு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கு, அதிகாரிகளின் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத குறித்த 47 பேரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரண் கருத்து தெரிவிக்கையில், ”தாம் அதிபர் இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாகவும் சரியான மருத்துவ அறிக்கை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பரிசீலிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேநேரம் ஆசிரியர்கள் பலரும் இவ்வாறு பல வருடங்களாக இடமாற்றம் இல்லாது ஒரே பாடசாலையில் இருப்பதாகவும், இடமாற்றம் வழங்கப்பட்டாலும் அவர்களில் பலர் அரசியல் செல்வாக்கு காரணமாக அதை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் இருப்பதால் பல்வேறு இடர்பாடகளை பாடசாலைகள் கண்டுவருவதாகவும் பெற்றோரால் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: