நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

Monday, June 11th, 2018

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை இன்றும் தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை முதல் இந் நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, மேல், தென், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வவ்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: