அதிரடி நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனம்!

Saturday, April 7th, 2018

பேஸ்புக்கில் பிரபல பக்கங்களை இயக்குபவர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் பிரசாரங்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட உள்ளது.

தெளிவான நடவடிக்கை இல்லாத பக்கங்களில் பதிவுகளை இடுவதை தணிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

தமது உண்மையான அடையாளத்தை மறைத்து, போலியான அடையாளத்துடன் கணக்குகளை செயற்படுத்துபவர்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: