நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Tuesday, August 1st, 2023இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டாவது எரிபொருள் தொகுதி நாளை வரவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தையில் புதிய சில்லறை விற்பனையாளர்களின் நுழைவு பெற்றோலியப் பொருள்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
Related posts:
மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் தாமதம் - ஆசிரியர் சங்கம் முறையீடு!
அளவெட்டியில் மீன் வியாபாரிகள் போராட்டம்!
முறை தவறிய சாரதித்துவம்: 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம்!
|
|
வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவசாய காணிகள் பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி...
நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமைய...
ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...