ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Saturday, December 23rd, 2023ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுயாதீன தணிக்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!
சிகரெட் விற்பனைக்கு புதிய சட்டம்!
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் - ...
|
|