தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, March 1st, 2023

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டும் வகையிலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

இதனிடையே மஹிந்த தேசப்பிரிய முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் - யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன...
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் - வளிமண்டலவியல் திணைக...
தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் தற்பொழுதுள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்வைத்தராது - இராணுவத் தள...