தனியார்துறை தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம் துறைசார் அமைச்சரிடம் கையளிப்பு!
Sunday, May 17th, 2020கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை நிறுவனங்கள் தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த விடயம் தொடர்பில் தொழில் ஆணையாளர் விமலவீர தெரிவித்தள்ளார்.
நாட்டின் தனியார்துறை வர்த்தக நிறுவனங்களின் நிலமைகள், ஊழியர்களின் பாதுகாப்பு என்பன தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு அவசியமான நிவாரணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்கான பணிகளை அரசாங்கத்திற்கு இலகுபடுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்!
புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு - ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில்...
கொள்ளுப்பிட்டி அனர்த்தம் - பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை!
|
|