கேரளா சட்டசபை தேர்தல்: நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Monday, April 18th, 2016

கேரளா சட்டசபை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு கடிதமொன்றினூடாக கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். எனினும் தமிழகத் தேர்தல் கண்காணிப்பிற்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா அரசிடமிருந்து கிடைத்துள்ள அழைப்பிற்கு ஏற்ப தேர்தல்கள் கண்காணிப்பாளர்களை அனுப்புவது தொடர்பில் அடுத்த வாரமளவில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: