சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை!

Sunday, February 26th, 2023

இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு, சுற்றுலா அட்டை ஒன்றை வெளியிடுவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

குறித்த சுற்றுலா அட்டையின் மூலம், நாட்டில் சுற்றுலாப்பயணிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்த சுற்றுலா தொழிற்துறையினருக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது, சிறப்பு வரப்பிரசாதங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் ...
துபாயின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட...
மின் கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பு அதிருப்தி - நாடுதழுவிய நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் ...