சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை!

Sunday, February 26th, 2023

இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு, சுற்றுலா அட்டை ஒன்றை வெளியிடுவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

குறித்த சுற்றுலா அட்டையின் மூலம், நாட்டில் சுற்றுலாப்பயணிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்த சுற்றுலா தொழிற்துறையினருக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது, சிறப்பு வரப்பிரசாதங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை - உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ...
கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம...
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை தெர...