சீனாவிடம் முதலீட்டை கோரியுள்ளோம் – அமைச்சர் நிமால்

Sunday, April 10th, 2016

நாட்டின் அபிவிருத்திக்கு கடன் தொகையினை வழங்காமல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன அரசிடம் கோரியுள்ளோம் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘சீன அரசாங்கத்தின் கடன் உதவியினை எதிர்பார்த்து நாம் இங்கு வரவில்லை. மாறாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோரவே நாம் இங்கு வந்தோம். அதனை சீன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். எமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர்கள் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்’ என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: