சமய சொற்பொழிவாளர் தசிதரன் காலமானார்!
Sunday, May 14th, 2017பிரபல சொற்பொழிவாளரும் ஆசிரியருமான சைவப் புலவர் நித்தியானந்தம் சசிதரன் (வயது-42) நேற்று உயிரிழந்தார். உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார். என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது
செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பங்கு கொண்டு விட்டு மதிய உணவு உட்கொண்டுள்ளார். அதன்போது இருமல் ஏற்பட்டு உடல் சோர்ந்தார். அங்கு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பயனளிக்காது நேற்று காலை உயிரிழந்தார். தரன் சேர் என்று அழைக்கப்படும் தெல்லிப்பழை பன்னாலையைச் சேர்ந்த தசிதரன் 2 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்களுள் ஒருவராவார்.
Related posts:
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!
வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!
தொலைபேசி உரையாடல்கள் இணையத்தளங்களில் – மக்களுக்கு எச்சரிக்கை!
|
|