சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, December 27th, 2021இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனை ஒன்றினை மேற்கொள்வதற்கு சீன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த வாரத்தில் குறித்த தொகை நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனை நடவடிக்கையினூடாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆதரவுக் கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.: வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் வென்றெடுத்தது தமிழ் தேசியக் கூட...
தலசீமியா நோய்க் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டம்!
புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவரின் மகளுக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் ...
|
|