பரீட்சை நிலையங்களில் அலைபேசி சமிஞ்ஞைக்கு தடை!

Monday, July 30th, 2018

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மத்திய நிலையங்களாக செயற்படும் அனைத்து மத்திய நிலையங்களுக்கும் அலைபேசிகளுக்கான சமிஞ்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்தார்.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சமிஞ்ஞை படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: