கண் வில்லைகளின் விலைகள் நள்ளிரவு முதல் விலைக்குறைப்பு!

Sunday, February 19th, 2017

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 38 வகை கண் வில்லைகளின் விலைகள் நேற்று நள்ளிரவு (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாரியளவில் குறைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவிததுள்ளார்.

கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால் கண் சத்திர சிகிச்சைக்கான விலைகளும் பெருமளவில் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுகாதார அமைச்சில் நேற்று இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்படி கண் வில்லைகளின் புதிய மற்றும் பழைய விலைகள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் கூறியதாவது

மக்களின் பயன் கருதி ஏனைய மருந்துகள், மருந்து உபகரணங்கள், தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் மற்றும் தனியார் துறையில் முன்னெடுக்கப்படும் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளினதும் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படும்.

‘சுகாதாரம்’ என்பது இலாபம் உழைக்கும் வியாபாரம் அல்ல. இது ஒரு சேவை. நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வரும்போது பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிட்டது. எனினும் இது தவிர்க்க முடியாதது. இதன் இறுதியில் மக்களுக்கே நன்மைக் கிட்டியுள்ளது.

அண்மையில் 48 வகை மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டபோது அரசாங்கத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் என் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதேநிலைதான் கண் வில்லைகள் குறைக்கப்பட்ட போதும் நிகழ்ந்தது. பல தூதுவர்கள் என்னுடன் இது தொடர்பில் சந்தித்துப் பேசினர். என்றபோதும் நாம் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறிய கொள்கையில் இருந்து சிறிதும் விலகவில்லை.

அரசாங்கத்தின் கொள்கை நாட்டின் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எனக்கும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் ஆதரவாளர்கள் இருக்கவில்லை.

புகையிலை விலையை அதிகரிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மிகவும் உறுதியாக செயற்பட்டார். புகையிலை நிறுவனத்தார் தாங்கள் விரும்பினால் இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்தி விட்டு நாட்டை விட்டுச் செல்ல முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

dig3209972_17022017_KAA_CMY

Related posts: