கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி –  ஜனாதிபதி!

Friday, October 6th, 2017

கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘சில்ப அபிமானி   2017 சர்வதேச கைப்பணி விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

கைப்பணித்துறைக்கு தேவையான வசதிகள், வளங்கள் மற்றும் சந்தை வாய்ப்பினை வழங்கி அத்துறையிலுள்ளோரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி செயற்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.தேசத்தின் பெருமையையும், தனித்துவத்தையும் கொண்டுள்ள எமது பாரம்பரிய கைப்பணித்துறையை அன்னிய செலவாணியை ஈட்டும் துறையாக மாற்றக்கூடிய சாத்தியங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , வெளிநாட்டு சொத்துக்களை அதிகரிப்பதற்காக உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி, முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.

2017 சர்வதேச கைப்பணி விழாவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கண்காட்சியையும் பார்வையிட்டார்.பேண்தகு இருப்புக்காக மரபுசார் கைப்பணித்துறையை போசித்து, பாதுகாக்கும் நோக்குடன் தேசிய கலை பேரவையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கைப்பணித்துறை விழா இன்றிலிருந்து 08 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – பணிப்பாளர்!
சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது - அமைச...
மறைத்து வைத்திருக்கும் அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் - அமைச்சர் ...