செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, July 26th, 2021

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்..

அத்துடன் குறித்த பாரிய மைல்கல்லை எட்டிய பின்னர் நாடு மீண்டும் முழுவதுமாக திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலத்சிங்கள பிரதேசத்தில் நேற்று புதிய சதோச கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் செப்டம்பர் மாதத்திற்குள், 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை போட்டு முடித்த நாடாக இலங்கை இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன் பிறகு, நாடு முழுமையாக திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்தவாரம் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி முகக்கவசம் ஒன்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: