யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மின் தடை!

Wednesday, October 5th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை(05) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 5.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி வல்வெட்டித் துறை வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சியம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதி தாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாகிசசாலை, பொக்கணைச் சந்தி, உடுப்பிட்டி வி.சி, நாச்சிமார் கோவிலடி, இலந்தைக் காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா, வடக்கு அல்லாரை, வெள்ளம் பொக்கட்டி, பாலாவி, கெற்பலி, அச்செழு போன்ற இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

power-CUT

Related posts: