குப்பைகள் மூலம் மின்சாரம் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Friday, August 11th, 2017

குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் முதலாவது வேலைத்திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் நகர்வாக அமையும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் – 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மேல்மாகாணத்தில் குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கரதியான பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரிய அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெறும் வேலைத்திட்டம் மிகப்பெரிய வெற்றியல்ல. ஆனாலும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண இது மிகச்சிறந்த வேலைத்திட்டமாக கருதப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: