இந்தியா – இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Monday, August 30th, 2021

இந்தியா – இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்திர விமானங்களும் இயக்கப்படவுள்ளது.

அத்துடன் ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இதுவேளை பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவை நாளை 31 ஆம் திகதிமுதல் மீண்டும் இயக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: