கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்று இறுதி கலந்துரையாடல்!
Monday, August 8th, 2016பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான இறுதி கலந்துரையாடல் உயர்கல்வி அமைச்சுடன் இன்று இடம்பெறவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலூடாக இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று எழுத்து மூலம் ஆவணம் செய்து கொள்ள எதிர்ப்பார்ப்பதாக எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இன்றைய கலந்துரையாடலின் பின்னர் தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எனவும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் 14 ஆவது நாளாக இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|