ஊழியர் நலன் சார்ந்த கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!
 Saturday, June 22nd, 2024
        
                    Saturday, June 22nd, 2024
            
ஊழியர் நலன் சார்ந்த கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்குகள் குழு கூடிய போது இது பற்றி விவாதிக்கப்பட்டது.
தொழிலாளர் திணைக்களத்தில் தொழில் வழங்குனர்களை பதிவு செய்ததன் பின்னர், அது தொடர்பான வருங்கால வைப்பு நிதி கொடுப்பனவுகள் மத்திய வங்கிக்கு செலுத்தப்படுவதாகவும், மத்திய வங்கியானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொழிலாளர் திணைக்களம் இது தொடர்பாக தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் தொழிலாளர் அலுவலகம் இணைந்து கூடிய விரைவில் கூட்டத்தை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டிஜிட்டல் தரவு அமைப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நல நிதியை செலுத்தத் தவறிய அமைப்புகள் மீது தற்போது 15,000 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        