நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!

Sunday, November 17th, 2019

நடந்து முடிந்த இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் நாளை அவர் அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித்தலைவரும் , கோத்தபாயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாள நாள் ஆகும். இந்நிலையில் மகிந்தவின் பிறந்த நாளான நாளைக் காலை 7 மணிக்கு கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: