இலங்கை விமானங்களிலும் கலக்ஸி நோட்-7 பாவனைக்கு தடை!

Tuesday, October 18th, 2016

விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்கா இதுபோன்றதொரு தடை உத்தரவை அந்த நாட்டு விமானங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விதித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சாம்சங் நிறுவனம், கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, 25 இலட்சம் கலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

14029251361

Related posts: