இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மியன்மார் அரசால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பு!
Wednesday, October 12th, 2022இலங்கை – மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் அரிசியை கையளித்தார்.
இதன்போது, வர்த்தக அமைச்சின் செயலாளர் S.T.கொடிகாரவும் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|