அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
Tuesday, December 21st, 2021மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனான பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் வகையிலேயே, இவ்விருவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை - ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முந்நூற்று தொண்ணூற்று இரண்...
|
|