அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, October 28th, 2021

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவும், குழப்ப நிலை காரணமாக, அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் பெரும்பாலான பகுதிகளில், இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சில பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்ற மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: