வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, December 8th, 2020

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக  தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலம் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Related posts:


மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு - பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவிப...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூ...