ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்க விரைவான திட்டம் தயாரிக்கப்படும் – அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, November 25th, 2020

சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள் மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக கூடியபோது நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை சேகரிக்குமாறு குறித்த குழு ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது. ஓய்வூதியம் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்கும் காரணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு விவாதிக்கப்பட்டது.

பொது சேவையில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்தும் இதன்போது கவனம்செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: