கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரிப்பு!

Saturday, May 29th, 2021

நாட்டில் நேற்றையதினம் 2 ஆயிரத்து 850 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் உள்நாட்டில் 2 ஆயிரத்து 845 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் கொவிட் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் தொற்றிலிருந்து நேற்று மேலும் 2,573 பேர் குணமடைந்துள்ளனர்.தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 146,362 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியான 29 ஆயிரத்த 986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை புத்தாண்டு கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்ததை கடந்து 80 ஆயிரத்து 610 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: