கட்டாக்காலி நாய்களை – கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, March 20th, 2019

வடமராட்சி, வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்டு திரிகின்ற கட்டாக்காலி நாய்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கு.கமலதாஸ் முன்வைத்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் சில திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts:


இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!
இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை - விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ...
பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஜேவிபி செய்தது - திஹாகொட பத்திய தேரர் சுட்டிக்கா...