ஈ – தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி!

Monday, March 6th, 2017

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அச்சிடும் பொறுப்பு உரிய விலை மனுக்கோரல் அடிப்படையில் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விலை மனுக்கோரல் குழுவின் பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கோப் குழுவும், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களமும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விசாரணை நடத்தி வரும் நிலையில் அவசரமாக நிறுவனமொன்றுக்கு அச்சிடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அச்சிடுவதற்கு 42 ரூபா அறவீடு செய்யப்படும் என விலை மனுக்கோரிய நிறுவனத்திற்கு வழங்காது, 72 ரூபா அறவீடு செய்யும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களை நிறுவனம் பூர்த்தி செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் சர்வதேச தர நிர்ணய சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts:

நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவ...
நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை - அமைச்சர் சமல் ராஜபக்ஷ த...
மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத...

வீதியில் குப்பைகளை கொட்டிய நபர்கள் - சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் மீண்டும் அள்ளிச் செல்லவேண்டிய ...
யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிச...
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை க...