தனியார் துறையினரின் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020

கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகங்களினூடாக குற்றச்சாட்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்தார்.

கிடைத்த முறைப்பாடுகளில் சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சம்பள பிரச்சினை தொடர்பில் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கோவை அனுப்பப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பித்துக்கது.

Related posts:

பிற மாவட்டங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும்
இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக...
ஒவ்வொரு மாகாணங்களுக்குமான பொலிஸ் அதிகாரப் பகிர்வின் பின்விளைவுகள் பாரதூரமானது - அமைச்சர் அலி சப்ரி ச...