புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Tuesday, December 20th, 2022
இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பூச்சியியல் அதிகாரிகள் வழங்கும் தரவுகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் - சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!
தடுப்பூசி வழங்கலில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும் - வடமாகாண ஜனநாயக போக்குவரத...
தென்கொரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து - பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பலி!
|
|
|
பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது - பொது சுகாதார...
வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் - அம்பா...
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...


