அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!
Tuesday, August 24th, 2021அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொடிகாமம் வர்த்தகர்கள் நால்வர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கோவிட் தொற்று - மாகாண சுகாதார சேவைக...
ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 304 பேர் பலி!..
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் - இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!
|
|
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிப்...
நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு விசேட வேலைத்திட்டம் - இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் த...
இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது - ஜனாதிப...