18 வீத பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனைக் குறைபாடு!
Tuesday, November 29th, 2016
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொனராகலை, பொலநறுவை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் மந்தபோசனைக் குறைபாடுகளுடன் உள்ளதாகவும்,
மேல் மாகாணத்தில் மருதானை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலுள்ள பாடசாலைகளிலும் இந்தக் குறைபாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 30 சதவிகிதமானோர் இரும்புச்சத்துக் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவும் கல்வியமைச்சின் பாடசாலை போசனை மற்றும் சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் தெரிவித்திருக்கிறார். 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச்சத்து விற்றமின் மற்றும் அடங்கிய பால் மற்றும் உணவுகளை வழங்க திட்டமொன்று முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
நல்லூர் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்திற்கு பொது மக்கள் அஞ்சலி!
நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்ப...
கொரோனாவுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தது சுவிர்சலாந்து – அந்நாட்டு மக்களுக்கு ந...
|
|