புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, July 30th, 2021

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் கடந்த ஒரு வாரகால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: