28 இலங்கையர்கள் கைது!

Friday, June 3rd, 2016

தமிழகத்தில் அகதிமுகாமிலுள்ள இலங்கையர்கள் சிலர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 28 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பிரதிநிதிகள் இருவர், இவர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அவர்கள் இந்தியாவின் புலிகட் வாவியினூடாக சுற்றுலாப் பயணிகள் போன்று படகு மூலம் அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: