A-9 வீதியில் விபத்து ஐவர் படுகாயம்!
Wednesday, July 11th, 2018
இன்று அதிகாலை வவுனியாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம் – இராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற வாகனமும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
Related posts:
பட்டமேல் டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம்!
பகடிவதை தொடர்பில்கைதான 15 பேருக்கும் மறியல் நீடிப்பு!
மின்சாரம் தடைப்படும்!
|
|