வட்டி விகிதத்தையும் மாற்று விகிதத்தையும் கட்டுப்படுத்தாமல் ஒரே மதிப்பில் வைத்திருந்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குத் செல்ல காரணம் – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, March 17th, 2023

நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட 02 முக்கிய காரணங்களை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற உரையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, புதிய சட்டத்தின் கீழ் உள்ள முக்கிய நோக்கங்களில் ஒன்று பணக் கட்டுப்பாடு. அதற்காக நாணயக் கொள்கை சபை செயல்பட்டு வருகிறது.

2020 முதல், மத்திய வங்கியில் கருத்து மாற்றம் ஏற்பட்டது. வட்டி விகிதத்தையும் மாற்று விகிதத்தையும் கட்டுப்படுத்தாமல் ஒரே மதிப்பில் வைக்கச் சொன்னார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி வைத்திருக்கும் இரண்டு கருவிகள் இவை.

இந்த இரண்டையும் கட்டுப்படுத்தாமல், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நிலைப்படுத்த முடியாது.

அதனால்தான் வட்டி விகிதம் 5% ஆகக் குறையும் போது, ​​குறைந்த வட்டியில் கடனுதவியில் இன்று அனைவரும் சிக்கித் தவிக்கிறனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: