வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!
Tuesday, May 17th, 2016
தம்புத்தேகமவுக்கும் தலாவ எனுமிடத்துக்கும் இடையில், தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியிருப்பதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
எனினும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதம் தம்புத்தேகம வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பயணிகள் சேவை மட்டுமல்லாமல் தபால் புகையிரத சேவையும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை செல்லாதோர் சிறுவர் இல்லத்தில் சேர்ப்பு!
இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!
கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வ...
|
|
|


