வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!
Tuesday, May 17th, 2016
தம்புத்தேகமவுக்கும் தலாவ எனுமிடத்துக்கும் இடையில், தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியிருப்பதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
எனினும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதம் தம்புத்தேகம வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பயணிகள் சேவை மட்டுமல்லாமல் தபால் புகையிரத சேவையும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் ஒரு வாரத்தில் 338 பேருக்கு கொரோனா தொற்று - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
எரிவாயு கொள்கலன்களின் செறிமான மாற்றம் - இலங்கை தரநிர்ணய நிறுவகமே பொறுப்பு - நுகர்வோர் உரிமைகள் பாதுக...
சுபீட்சத்தின் நோக்கு கொள்கையுடன் இலட்சியத்துடன் முன்னேறுவோம் - வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!
|
|